Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிக்கு பொறுப்பெற்ற ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (08:10 IST)
ஆப்கானிஸ்ஹன் நாட்டின் அரசு வீழ்ச்சியடைந்து தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு வந்ததிலிருந்தே அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதை பார்த்து வருகிறோம். தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர் என்பதும் இதனால் காபூல் விமான நிலையத்தில் பெரும் கூட்டம் இருபத்தி நான்கு மணிநேரமும் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து அடுத்தடுத்து நான்கு வெடி குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட மொத்தம் 60 பேர் பலியாகியுள்ளதாகவும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்த அமைப்புக்கு உலக நாடுகள் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அப்பாவி மக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் பலியானதற்கு இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments