Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைச்சாலையில் திடீர் தீ விபத்து; அலறி ஓடிய கைதிகள்! – 41 பேர் பலியான சோகம்!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (08:54 IST)
இந்தோனேஷியாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள சிறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சிறை அறைகளுக்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகள் பலர் வெளியேற முடியாமல் சிக்கி உயிரிழந்துள்ளனர். தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைத்தனர்.

இந்த கொடூர விபத்தில் சிறை கைதிகள், காவலர்கள் உட்பட 41 பேர் சோகமாக பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments