Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூதாட்டத்தில் ஈடுபட்ட சிங்கப்பூர் வாழ் இந்தியருக்கு 30 மாதம் சிறை

Webdunia
சனி, 10 அக்டோபர் 2015 (12:41 IST)
கால்பந்தாட்டத்தின்போது சூதாட்டாத்தில் ஈடுபட்ட, சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வருக்கு 30 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

 
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற சிங்கப்பூர் மற்றும் சரவாக் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற மலேசிய சூப்பர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது.
 
இந்த போட்டியில் சிங்கப்பூர் வாழ் இந்தியரான செல்வராஜ் லக்ஷ்மணன் (52) என்பவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் 15ஆயிரத்து 500 சிங்கப்பூர் டாலர் அளவிற்கு சூதாட்டத்தில் ஈடுபட்டது.
 
இவர் தவிர, ஆட்ட நடுவர் ஷோரி நோர் (50) மற்றும் தனசேகர் சின்னையா (40) ஆகிய இருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசாரணை முடிவில் மூவர் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
 
இதனையடுத்து, செல்வராஜ் லக்ஷ்மணனுக்கு 30 மாதங்கள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நடுவர் ஷோரி நோர் மற்றும் தனசேகர் சின்னையா ஆகிய இருவருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து கூறியுள்ள துணை அரசு வழக்கறிஞர், “இது போன்ற சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது சிங்கப்பூர் அரசு கொஞ்சம் கூட சகிப்புத் தன்மையை காட்டாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

Show comments