Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இந்திய மருத்துவருக்கு சிறைதண்டனை

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (11:29 IST)
சிங்கபூரில் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இந்திய மருத்துவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த லூக்கா மணிமாறன் தேகராஜூ, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாக உள்ளார். மருத்துவமனைக்கு இளம்பெண் ஒருவர்  தனக்கு முதுகு வலியும், இடுப்பு வலியும் இருப்பதாக மணிமாறனிடம் சிகிச்சைக்காக வந்துள்ளார். மணிமாறன் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம், சிகிச்சை அளிப்பதாக கூறி அவரது ஆடையை அவிழ்க்க சொல்லி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இதனையடுத்து லூக்கா மணிமாறன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையின்போது அவர் மீதான பாலியல் தொல்லை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு. 3 பிரம்படி தருமாறும் நீதிபதி உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்