Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டு வைக்கும் அமெரிக்கா.. கூட்டு சேரும் இந்தியா! – விழிபிதுங்கும் உலக சுகாதார அமைப்பு?

Webdunia
திங்கள், 18 மே 2020 (09:30 IST)
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளது.

சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தர்போது உலகம் முழுவதும் தீவிரமாக பரவி பல லட்சம் உயிர்களை பலி கொண்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா சிறப்பாகவே செயல்பட்டதாக உலக சுகாதார அமைப்பு கூறியது. ஆனால் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா உலக சுகாதார அமைப்புக்கான நிதியையும் நிறுத்தியது.

இந்நிலையில் கொரோனா நடவடிக்கைகளில் உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகள் குறித்து சுயாதீன விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியா உலக சுகாதார சட்டமன்றத்திடம் வரைவு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன. ஒருபக்கம் உலக சுகாதார அமைப்பின் மீதான இந்த மதிப்பாய்வு நடவடிக்கைகளை இந்தியா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டுள்ள நிலையில் மறுபுறம் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் சீனாவை கொரோனா பரவுதலுக்கு முக்கிய காரணமாக குற்றம் சாட்டி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments