Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் முதல் பிரதமராகும் கிரிக்கெட் வீரர்: இம்ரான்கான் முன்னிலை

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (06:38 IST)
பாகிஸ்தானில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று இரவே வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சி முன்னிலை வகித்து வந்தது.
 
மொத்தமுள்ள 272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், இம்ரான்கான் கட்சி தற்போது 114 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 
 
இந்த நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதால் இந்த முடிவை தாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று  நவாஸ் ஷரீப் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் தேர்தல் அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
கட்சி தொடங்கி 20 ஆண்டுகளுக்கு பின்னர் இம்ரான்கான் தற்போது தான் அதிபர் நாற்காலியை நெருங்கியுள்ளார். எனவே அவரது கட்சியினர் உற்சாகமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இவர் அதிபர் பதவியை ஏற்றால், உலகில் ஒரு நாட்டிற்கு அதிபராகும் முதல் கிரிக்கெட் வீர்ர் என்ற பெருமையை பெறுவார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments