Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தை பெற்றுத்தராத மனைவியின் கைகளை வெட்டிய கொடூர கணவன்

குழந்தை பெற்றுத்தராத மனைவியின் கைகளை வெட்டிய கொடூர கணவன்
, புதன், 3 ஆகஸ்ட் 2016 (17:04 IST)
தனக்கு ஒரு வாரிசை பெற்றுத் தராத மனைவியின் கரங்களை, அவரது கணவனே வெட்டிய சம்பவம் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் நடந்துள்ளது.


 

 
கென்யாவின் மசி என்ற பகுதி உள்ளது. அதில் வசித்து வருபவர் ஸ்டீபன் நிகில. அவரன் மனைவி ஜாக்குலின் மெவண்டே. இவர்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது. ஆனால், அவர்களுக்கு குழந்தை இல்லை.
 
இதனால் கோபத்தில் இருக்கும் ஸ்டீபன், தன்னுடைய மனைவியை அடிக்கடி கொடுமைபடுத்தி வந்துள்ளார். ஜாக்குலினுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை உள்ளதால், மருத்துவமனைக்கு சென்று ஒரு வருடம் சிகிச்சையும் பெற்றுள்ளார். ஆனால், ஸ்டீபன் சிகிச்சை எடுக்க மருத்துவிட்டார். 
 
மேலும், ஜாக்குலினுக்குதான் உடலில் பிரச்சனை என்று கூறி வந்துள்ளார். அடிக்கடி சண்டை வருவதால், கணவனுடன் கோபித்துவிட்டு தன்னுடைய தாய் விட்டுக்கு சென்ற ஜாக்குலின், 3 மாதங்களுக்கு பிறகு சமீபத்தில்தான் வீடு திரும்பியுள்ளார்.
 
இந்நிலையில், சம்பவத்தன்று மனைவியுடன் சண்டை போட்ட ஸ்டீபன், இதுதான் உன்னுடைய கடைசி நாள் என்று கூறி அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ஜாக்குலினின் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 
 
மேலும், மோசமான காயங்களால் அவரது இரண்டு கைகளையும் எடுக்க வேண்டியிருந்தது. பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் அவரை உள்ளூரை சேர்ந்த மகளிர் அமைப்பு ஒன்று பாதுகாத்து பராமரிப்பதாக கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரசவ வார்டில் இருந்து குழந்தையை தூக்கி சென்ற நாய்