Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாத குழந்தையை அடித்து பேஸ்புக்கில் படத்தைப் போட்ட தந்தை

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2014 (13:32 IST)
பிரான்ஸில் தனது ஒரு மாத குழந்தை அழுவதைச் சகித்துக்கொள்ள முடியாத இளம் தந்தை ஒருவர், குழந்தையை அடித்து அதன் புகைப்படத்தை பேஸ்புக் இணையத்தளத்தில் பதிவேற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பிரான்ஸின் டர்னியர் பகுதியில் இருந்து காவல் துறைக்கு பாதிக்கப்பட்ட குழந்தை குறித்து தகவல் வந்தது. ஒரு மாதமே ஆன குழந்தையின் முகத்தில் ரத்த காயம் இருப்பதாகவும், குழந்தையின் புகைப்படத்தை அதன் தந்தை பேஸ்புக்கில் போட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
இதை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினரிடம், குழந்தையின் தந்தை,' என் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. என்னால் அதை சகிக்க முடியவில்லை. அதனால் அடித்தேன். காயமடைந்த குழந்தையின் புகைப்படத்தை பேஸ்புக்கில் விளையாட்டிற்காக பதிவேற்றினேன்' எனத் தெரிவித்துள்ளார்.
 
தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் அக்குழந்தைக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.      
 

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments