Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (17:29 IST)
4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக அமெரிக்கா இந்தியா பிரேசில் ஆகிய மூன்று நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் அதிகமாக உள்ளது என்பதுதான் உண்மையாக உள்ளது. இந்த நிலையில் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். ஒருசில விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது
 
இந்த நிலையில் நான்கு சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா மிருகக்காட்சிசாலையில் நான்கு சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அந்த சிங்கங்களுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
மனிதர்களைப்போல விலங்குகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வாய்ப்பில்லை என்பதால் விலங்குகளுக்கு மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவும் அச்சம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments