Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிகளால் இறந்த பயிற்சியாளர்: இறந்தது தெரியாமல் விளையாடிய புலிகள்

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (15:58 IST)
இத்தாலியில் சர்க்கஸ் பயிற்சியாளர் ஒருவரை புலிகள் கொன்றுவிட்டு அவர் இறந்தது கூட தெரியாமல் அவருடன் விளையாட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வன விலங்குகளை சர்க்கஸ் போன்றவற்றில் பயன்படுத்துவதில் பல ஆபத்துகள் உள்ளன. அதனால் பல நாடுகளில் சர்க்கஸில் வன உயிரினங்களை பயன்படுத்த அனுமதிப்பது இல்லை. இருந்தாலும் இத்தாலி போன்ற சில நாடுகளில் இன்னும் அதற்கான சட்டங்கள் எதுவும் வரவில்லை.

இத்தாலியில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் விலங்குகளுக்கு பயிற்சி அளிப்பவர் எட்டோர் வெபர். அந்த சர்க்கஸில் உள்ள நான்கு புலிகளுக்கும் இவர்தான் பயிற்சியாளர். வெளியே புலிகளாய் தெரிந்தாலும் வெபரிடம் பூனைப்போலவே கொஞ்சி விளையாடின அந்த புலிகள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னால் புலிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக கூண்டுக்குள் சென்றார் வெபர். அப்போது ஒரு புலி விளையாட்டாக அவர் மேல் தாவ, அதை பார்த்து மற்ற புலிகளும் அவர் மேல் தாவின.

திடீரென ஆக்ரோஷமடைந்த புலிகள் தங்களுக்குள் சண்டை போட்டபடி வெபரையும் கடித்து குதறிவிட்டன. இதில் வெபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அது தெரியாமல் கீழே கிடந்தவரை எழுப்பிவிட அந்த புலிகள் முயற்சித்து கொண்டிருந்தன. காவல்துறையினரும், சர்க்கஸ் பணியாளர்களும் எவ்வளவு முயற்சி செய்தும் புலிகள் அவரது உடலை விட்டு விலகாமல் தொடர்ந்து விளையாடியபடியே இருந்துள்ளன.

வெபர் இறந்தது ஒரு பக்கம் இருந்தாலும், அவரை கொன்றுவிட்டது கூட தெரியாமல் விளையாடி கொண்டிருந்த புலிகளை நினைக்கையில் பலர் வருந்தினர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments