Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: மருத்துவமனையில் அனுமதி..!

Mahendran
புதன், 2 ஏப்ரல் 2025 (16:04 IST)
வங்கதேசத்தில் பானிபூரி  சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 100 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வங்கதேச நாட்டில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இரவில் நடந்த திருவிழாவில் பானிபூரி  சாப்பிட்டவர்கள் தங்களது வீடு திரும்பிய பின்னர் கடும் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைகள் ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
 
இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 10 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், பொதுமக்கள் சாப்பிட்ட பானிபூரியில் பாக்டீரியாக்கள் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 
இந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பானிபூரி  கடைக்காரரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அனைத்து பானிபூரி  கடைகளிலும் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments