Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரியல் பூங்காவில் தீ; கருகி உயிரிழந்த குரங்குகள்

Arun Prasath
வெள்ளி, 3 ஜனவரி 2020 (12:54 IST)
ஜெர்மனியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குரங்குகள் தீயில் கருகி உயிரிழந்தன.

ஜெர்மனியின் நார்த் ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் அமைந்துள்ளது கிரெஃபெல்டு உயிரியல் பூங்கா. இந்த பூங்கா மிகவும் பழமையான பூங்கா என அறியப்படுகிறது.

இதில் சிம்பான்சி, ஓராங்கட்டான் கொரில்லா போன்ற குரங்குகளுக்கு பிரத்யேக சரணாலயம் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற கொண்டாட்டத்தில் திடீரென  பூங்காவில் தீ பிடித்தது. உடனடியாக தீயணைப்பு படையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். எனினும் அதற்குள் தீ பூங்கா முழுவதும் பரவியது.

இந்த விபத்தில் சரணாலயத்தில் இருந்த 32 குரங்குகளில் 30 குரங்குகள் தீயில் கருகி உயிரிழந்தன. உயிரியல் பூங்காவில் எவ்வாறு தீ பிடித்தது என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments