Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதாளத்தில் பயங்கரம்!! வாயைப்பிளந்த போலீஸார்; வில்லங்கமாய் சிக்கிய விவசாயி

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (17:03 IST)
பாதாள அறைக்குள் ரூ.3.35 கோடி மதிப்பிலான கஞ்சா செடிகளை வளர்த்ததால் கைது செய்யப்பட்டுள்ளார் விவசாயி ஒருவர். 
 
டேனியல் பால்மர் என்பவர் லண்டன் டெப்ரோக்ஸ்டவ் பகுதியை சேர்ந்தவர். இவர் தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தில் விவசாய  கிடங்கு ஒன்றை கட்டி பாதாள அறைகளை அமைத்துள்ளார். அதோடு கிடங்கிற்கு மின்சார வசதியையும் செய்து வைத்திருந்துள்ளார். 
 
அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பலர் விளையும் காய்கறிகளையும் பழங்களையும் அந்த கிடங்கில் பாதுகாத்து வருகிறார் என நினைத்திருந்துள்ளனர். ஆனால், பாதாள அறைக்குள் கஞ்சா பயிரிட்டு இருந்துள்ளார். ஆம், இந்திய மதிப்பில் ரூ.3.35 கோடிக்கு கஞ்சா பயிரப்பட்டிருந்துள்ளது. 
 
இதை தெரிந்துக்கொண்ட போலீஸார் விவசாயிடம் விசாரித்த போது முதலில் கஞ்சா செடி வளர்ப்பு பற்றித் தெரியாது என கூறி வந்தவர் பின்னர் போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து 6 வருடம் 3 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments