Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் பலி

Webdunia
திங்கள், 25 மே 2015 (13:21 IST)
பாகிஸ்தானில் உள்ள உணவு விடுதி அருகே குண்டு வெடித்ததால், அதில் சிக்கி 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
 
பாகிஸ்தான் நாட்டில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறிகொண்டுதான் உள்ளது. இதில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு உணவு விடுதி அருகே வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.
 
இந்த கொடூர சம்பவத்தில் சிக்கி இதுவரை 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத  அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இத்தாக்குதல் சம்பவத்திலிருந்து பாகிஸ்தான் அதிபரின் மகன் சல்மான் மன்மூன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

Show comments