Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கிளம்பியது எபோலா வைரஸ்! – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (13:43 IST)
கொரோனா பாதிப்பிலிருந்தே உலகம் முழுவதும் மீளாத நிலையில் மீண்டும் எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு முன்னர் மக்களை உலுக்கிய மோசமான வைரஸ் தொற்றுகளில் முக்கியமானது எபோலா வைரஸ். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் கடந்த சில ஆண்டுகளில் பல உயிர்களை பலி கொண்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு காங்கோவில் ஏற்பட்ட எபோலா காய்ச்சலால் 2,300 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் எபோலா வைரஸ் காங்கோவின் வடமேற்கு பகுதியில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் அருகே உள்ள தான்சானியா நாட்டில் எபோலாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பிலிருந்து உலகம் இன்னும் மீளாத சூழலில் மீண்டும் எபோலா பரவல் தீவிரமடைவது ஆப்பிரிக்க நாடுகளை மட்டுமன்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments