Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எபோலா நோய் தாக்கி பலியாவோர் எண்ணிக்கை 20,000 ஆக அதிகரிக்கும் - உலக சுகாதார மையம்

Webdunia
வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (18:53 IST)
உலகை அச்சுறுத்திவரும் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாவோர்களின் எண்ணிக்கை 20,000 பேரை எட்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மருந்து கண்டறியப்படவில்லை. இந்நிலையில், இந்த உயிர்கொல்லி நோய் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை  1,552 ஆக அதிகரித்துள்ளது.
 
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிவரும் இந்த எபோலா வைரஸ் தாக்குதலால் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் பாதிப்படைந்துள்ள நிலையில் இரு அமெரிக்கர்களையும் இந்த நோய் தாக்கியுள்ளது.
 
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் மக்களுக்கு விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
 
இந்நிலையில், இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டு பலியாவோர்களின் எண்ணிக்கை குறித்து உலக சுகாதார மையம் தெரிவிக்கையில்,  எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாவோர்களின் எண்ணிக்கை 20,000 பேரை எட்டும் எனவும் மேலும் இந்த நோயை தடுக்க அடுத்த ஆறு மாதங்களில் 490 மில்லியன் டாலர் பணம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளது.    
 

புதிய அணை - கேரள அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியக் கூடாது..! சீமான் வேண்டுகோள்..!!

எப்படி இருக்கிறார் வைகோ.? வதந்திகளை நம்பாதீர்கள் - மகன் வேண்டுகோள்..!

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

Show comments