Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாய் புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் வண்ணமயமாக ஒளிர்ந்தது உண்மையா? பரபரப்பு தகவல்..!

Mahendran
செவ்வாய், 23 ஜனவரி 2024 (11:20 IST)
துபாய் புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் வண்ணமயமாக ஒளிர்ந்ததாக தகவல் வெளியான நிலையில் இது உண்மையில்லை என தெரிய வந்துள்ளது.
 
புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் ஒளிர்ந்ததாக எந்த ஆதாரமும் இல்லை எனவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் படம் எடிட் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
 
புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் உண்மையான படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடியபோது அந்தப் படத்தில் ராமரின் படம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் உரிமையாளர் எமராட்ஸ் குழுமம், ராமர் படம் ஒளிர்ந்ததாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில் துபாய் போன்ற நாடுகளில் கூட ராமர் மதிக்கப்படுகிறார் என்பதை நிரூபிக்க இந்தச் செய்தி பரப்பப்பட்டதாகவும், இந்தச் செய்தியை பரப்பியவர்கள், புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் ஒளிர்ந்ததாகக் கூறும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை மறைத்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments