Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப்- கிம் ஜாங் சந்திப்புக்கான அதிகாரபூர்வமான நேரம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (11:59 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு வரும் 12ம் தேதி காலை 9 மணிக்கு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவும் வடகொரியாவும் அணு ஆயுத கொள்கை விஷயத்தில் மோதிக்கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்தது. இதன் பின்னர் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது போக்கை மாற்றிக்கொண்டு டிரம்பை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
 
இதனையடுத்து, இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ஆம் தேதி நேரில் சந்திக்க இருந்தனர். ஆனால், திடீரென டிரம்ப், கிம் உடனான சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதன் பின்னர் மீண்டும் சிங்கப்பூர் சந்திப்பு நடைபெறும் என டிரம்ப் தெரிவித்தார்.
 
இந்நிலையில் டிரம்பும், கிம்மும் வரும் 12ம் தேதி சிங்கப்பூரில் காலை 9 மணிக்கு சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments