Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டரிலிருந்து தீய சக்திகளை விரட்டும் பாதிரியார்

Webdunia
சனி, 15 ஜூன் 2019 (18:55 IST)
கொலம்பியா நாட்டில்,வானில் இருந்து புனித நீர் தெளித்து தீய சக்திகளை விரட்ட, பாதிரியாருக்கு, அந்நாட்டு ராணுவம், ஹெலிகாப்டர் வழங்கி உதவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலம்பியாவில் ப்யூனாவென்ட்சுரா எனும் மாநகராட்சியில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 51 கொலைகள் நடந்திருக்கின்றன.

இதனையடுத்து ப்யூனாவென்ட்சுரா நகரை, அந்நாட்டினர் துர்திஷ்டவசமான ஊர் என்று அழைக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் ப்யூனாவென்ட்சுரா நகரில் உள்ள ரூபன் டாரியொ ஜராமில்லோ மோடோயா என்ற பாதிரியார், ப்யூனாவெண்ட்சுரா நகரை பேய் பிடித்திருக்கிறது எனவும், எனவே தாம் வான்பரப்பிலிருந்து புனித நீர் தெளித்து தீய சக்திகளை விரட்ட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பாதிரியார், அவ்வாறு வானில் இருந்து புனித நீரை தெளிக்கும்போது, கடவுளின் ஆசி கிடைக்கும் எனவும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் பாதிரியாரின் கோரிக்கைக்கு கொலம்பியா ராணுவம், வானத்திலிருந்து நீர் தெளிக்க ஹெலிகாப்டரை வழங்கவிருப்பதாக கூறியிருக்கிறது.

இச்செய்தி சமூக வலத்தளங்களில் பலரால் கேலி செய்யப்பட்டாலும், கொலம்பியாவின் ப்யூனாவென்ட்சுரா நகரைச் சேர்ந்த மக்கள் பாதிரியாரின் மேல் பெரும் நம்பிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

ஜம்மு காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கு? அமித்ஷாவிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments