தாவூத் இப்ராஹிமின் வசிப்பிடம் எது? பிரிட்டன் நிதி அமைச்சகம் தகவல்

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (05:28 IST)
மும்பை குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியும் உலகமே தேடி கொண்டிருக்கும் தீவிரவாதியுமான தாவூத் இப்ராஹிம் எங்கு தங்கியிருக்கின்றார் என்பது குறித்த ரகசியம் யாருக்கும் தெரியாத நிலையில் அவர் பாகிஸ்தானில் மூன்று முகவரியில் மாறி மாறி தங்கியிருப்பதாகவும், அவருக்கு 21 பெயர்கள் இருப்பதாகவும் பிரிட்டன் நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது



 
 
இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகவும், இந்த விஷயம் பாகிஸ்தான் அரசுக்கு நன்கு தெரியும் என்றாலும் இன்று வரை அதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது இல்லை என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து கருத்துகூறியுள்ள பாகிஸ்தான், தங்கள் நாடு என்றைக்குமே தீவிரவாதத்திற்கு எதிரான நாடு என்றும், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாகிஸ்தான் போல் உலகில் வேறு எந்த நாடும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
 
கடந்த 1993ஆம் ஆண்டு தாவூத் இப்ராஹிம் நடத்திய மும்பை குண்டுவெடிப்பால் சுமார் 260 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments