Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தத்தால் வந்த வினை: மகளுக்கு மொட்டை அடித்து வீட்டு சிறையில் வைத்த தந்தை

Webdunia
வியாழன், 28 ஜூலை 2016 (17:39 IST)
தன்னுடைய மகள் ஆண் நண்பர் ஒருவருக்கு பொது இடத்தில் முத்தம் கொடுத்ததால், அவருக்கு மொட்டையடித்து நான்கு ஆண்டுகளக வீட்டு சிறையில் வைத்திருந்திருக்கிறார் கொடூர தந்தை ஒருவர்.


 
 
அமீனா அல் ஜெப்ரி என்ற 21 வயதான இந்த இஸ்லாமிய பெண் இங்கிலாந்து மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் குடியுரிமையை பெற்றவர். இவர் இங்கிலாந்தில் இருந்த போது தன்னுடன் பழகிய ஆண் நண்பர் ஒருவருக்கு பொது இடத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.
 
இதனை தெரிந்து கொண்ட அவரது தந்தை அவரை சவுதி அரேபியா அழைத்துக்கொண்டு போய், அவருக்கு மொட்டை அடித்து, கை, கால்களில் சங்கிலி மாட்டி அவரை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்திருக்கிறார். ஒரே ஒரு வேளை உணவு மட்டுமே அவருக்கு அளித்து வந்துள்ளார்.
 
நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த கொடுமை அமீனாவின் சகோதரி மூலம் தெரியவந்து அவர் மீட்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் தனது மகளை வீட்டுச்சிறையில் வைக்கவில்லை என மறுத்துள்ளார்.
 
லண்டன் நீதிமன்றத்தில் அமீனா அவரது தந்தை மீது புகார் அளித்துள்ளார். அதன்படி அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments