Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றம் உத்தரவையடுத்து கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தில் சோதனை

Webdunia
சனி, 24 மார்ச் 2018 (11:39 IST)
லண்டன் நீதிமன்றம் உத்தரவையடுத்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 
 
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் அமெரிக்காவில் வசிக்கும் 50 மில்லியின் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடி, டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தியதாக லண்டனில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் தலைமை அலுவலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
 
இது குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அளித்த பேட்டியில், பேஸ்புக் பயணாளிகளின் தகவல்கள் திருடப்பட்டது உண்மைதான் என தெரிவித்தார். இதனால் பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடிய புகாரில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தை லண்டன் தகவல் ஆணையர் விசாரித்து வந்தார்.
 
இந்நிலையில், லண்டன் நீதிமன்றம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தை சோதனையிட உத்தரவிட்டது. இதனையடுத்து, லண்டன் தகவல் ஆணையர் தலைமையில் அமலாக்கபிரிவினர் அங்கு சோதனையில் ஈடுபட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments