Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழல் செய்த ராணுவ தளபதி சுட்டுக் கொலை: வட கொரியா அதிரடி

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2016 (09:35 IST)
வட கொரியாவில் ஊழல்  செய்த குற்றத்திற்காக ராணுவ தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.


 


வட கொரியாவில் ராணுவ தளபதியாக இருந்த ரி யாங் கில் அரசியலில் பிளவு ஏற்படுத்தியதுடன், ஊழலிலும் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கும் கிம் ஜாங் உன்  தலைமையிலான அரசு மரண தண்டனை விதித்தது. அதன்படி, அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
வட கொரியாவில் உயர் பதவியில் இருப்பவர்கள் ஊழல் உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு மரண தண்டனையளிப்பதற்கு அந்நாட்டு அரசியல் சட்டம் இடமளிக்கிறது.
 
ஏகாதிபத்தியத்தையும் அமெரிக்காவையும் கடுமையாக எதிர்க்கும் நாடுகளுள் வடகொரியா முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

Show comments