Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கப்பலில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; அக்கறை காட்டாத உலக நாடுகள்!!

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (15:54 IST)
டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது. 
 
ஜப்பானின் சொகுசு கப்பலான டைமண்ட் பிரின்சஸ் கப்பல் கடந்த மாதம் 20 ஆம் தேதி ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு புறப்பட்டது.
 
இக்கப்பல் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பிய போது, அக்கப்பலில் பயணித்த 80 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் ஜப்பான் துறைமுகத்தில் அனுமதிக்க மறுத்தனர். இதனை தொடர்ந்து அக்கப்பலில் 135 பேருக்கு வைரஸ் தொற்று இருந்ததாக அறியப்பட்டது.
 
தற்போது அக்கப்பலில் உள்ள இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானின் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்த பரிசோதனையில் மேலும் 44 பேருக்கு கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஜப்பான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளார். 
 
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்ட 44 பேரும் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவலை ஜப்பான் வெளியிடவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments