Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலம்பியாவில் பேருந்து விபத்து: 31 குழந்தைகள் பலி!

Webdunia
திங்கள், 19 மே 2014 (19:49 IST)
வடக்கு கொலம்பியாவில் பேருந்து ஒன்றில் தீப்பிடித்ததில் 31 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். பேருந்திலிருந்த 25-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு கொலம்பியாவில், தலைநகர் பொகோடோவில் இருந்து 850 கி.மீ. தொலைவில் மத விழா ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு 31 குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஒரு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். பலியான குழந்தைகள் அனைவருக்கும் ஒன்றிலிருந்து 8 வயது உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அப்போது பேருந்து தீ பிடித்ததில் 31 குழந்தைகள் பலியாகினர். எஞ்சியிருந்தவர்கள் அனைவருக்கும் அதிக அளவில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
 
பேருந்தில் எரிபொருள் கொண்டு வந்ததே விபத்துக்கு காரணம் என அந்நாட்டு செய்தித்தாள் என்று தெரிவிக்கின்றது. இருப்பினும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

Show comments