Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல் மட்டம் 3 அடிவரை உயரும்: நாசா எச்சரிக்கை

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2015 (15:22 IST)
பருவநிலை மாற்றம் புவி வெப்பமடைதல் முதலிய காரணங்களால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 3 அடி உயரும் என்று நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐக்கிய நாடுகளின் குழு பருவநிலை மாற்றம் குறித்தும், கடல் மட்டம் உயர்வு குறித்தும் கடந்த  2013 ஆம் ஆண்டு ஆய்வு நடத்தியது.
 
அந்த அய்வில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தின் அளவு ஒரு அடியில் இருந்து மூன்று அடியாக உயரலாம் என்று கூறப்பட்டிருந்தது.
 
ஆனால் அது எவ்வளவு வேகமாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது. கிரீன்லாந்து  மற்றும் அண்டார்டிகா போன்ற பகுதியில், பனிப்பாறைகள் உருகியதால் கடல்மட்ட அளவு கடந்த 1992 ஆம் ஆண்டிற்குப் பின்னர் 3 அங்குலமாக உயர்ந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது. 
 
23 ஆண்டுகாலமா நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் தெவியவந்துள்து. இந்நிலையில், கடல் மட்டம் உயர்ந்தால் அது கோடிக்கணக்கான மக்களுக்கு ஆபத்தானதாக அமையும் என்று நாசா கவலை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments