Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தின் இஞ்ஜினில் நாணயத்தை வீசிய சீன பெண்!!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (15:47 IST)
ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவர் மூடநம்பிக்கையின் காரணமாக விமான இஞ்ஜினில் நாணயங்களை வீசிய சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
விமான நிலையத்தில் 80 வயதான சீனப் பெண் ஒருவர் விமானத்தின் இஞ்ஜினை குறிவைத்து, சரமாரியாக நாணயங்களை வீசத்தொடங்கினார். 
 
அவர் 9 நாணயங்களை வீசினார். அவற்றில் ஒரு நாணயம் இஞ்ஜின்மீது விழுந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
 
உடனே, விமானத்தில் இருந்த 150 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். விமானத்தின் இஞ்ஜின் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 
 
அந்தப் பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நாணயங்களை வீசி பிரார்த்தனை செய்தால் பயணம் பத்திரமாக அமையும் என்ற மூட நம்பிக்கையில் செய்தேன் என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments