Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலி

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2015 (10:04 IST)
சீனாவின் ஷாங்காய் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி 35 பேர் பலியானார்கள். மேலும் 42 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 
சீனாவின் ஷாங்காய் பகுதியில், புராதன அரண்மனைகள் மற்றும் நேர்த்தியான கடைத் தெருக்களை ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
 
2015 ஆவது புத்தாண்டையொட்டி, பயணிகளை கவருவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், புத்தாண்டு பிறப்பை கொண்டாட ஆயிரக்கணக்கானோர் ஓரிடத்தில் கூடியிருந்த போது, அங்கு சில விஷமிகள் கட்டடத்தின் ஜன்னலில் இருந்து போலி பண நோட்டுகளை வீசினர்.
 
அதனை எடுப்பதற்காக ஒரே இடத்தில் ஏராளமானோர் ஓடியதால் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலியாயினர், மேலும் சுமார் 48 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை: டிட்கோ நிர்வாக இயக்குனர் தகவல்..!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. என்ன காரணம்?

விமானம் கிளம்பும் நேரத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக இறங்கிய பயணிகள்..!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

Show comments