Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 கி.மீ ஓட்டம்; திடீர் மழை; இறந்து விழுந்த வீரர்கள்! – சீனாவில் சோக சம்பவம்!

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (09:12 IST)
சீனாவில் 100 கி.மீ மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள் தட்பவெட்ப நிலை மாற்றத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் கன்சூ மாகாணத்தில் 100 கி.மீ மாரத்தான் ஓட்டம் தொடங்கி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 172 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஓட்ட பந்தயத்தில் ஓடிக் கொண்டிருந்த பலருக்கு தட்பவெட்ப நிலை மாறுதல், உடல்கோளாறு காரணமான பிரச்சினைகளால் சாலையிலேயே இறந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை வரை மாரத்தான் ஓட்ட தடத்தில் இதுவரை 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 5 பேர் மாயமாகியுள்ளனர். மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட 151 பேர் நலமுடன் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மாரத்தான் ஓட்டத்தின் இடையே எதிர்பாராமல் பெய்த கனமழையால் தட்பவெட்ப மாற்றம் எழுந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments