Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவர்களையும், ஆண்களையும் பாலியல் வேட்கைக்கு பயன்படுத்திய வாடிகன் கார்டினல்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (15:22 IST)
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பல்லார்ட் நகரை சேர்ந்த கார்டினல் ஜார்ஜ் பெல் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. 75 வயதான அவர் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனில் பணியாற்றி வருகிறார்.


 
 
1970 முதல் 1990 வரையிலான கால கட்டங்களில் கார்டினல் ஜார்ஜ் பெல் சிறுவர்கள் மற்றும் ஆண்களை பாலியல் வேட்கைக்கு பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது.
 
1970-ஆம் ஆண்டுகளில் தண்ணீரில் நீந்திக்கொண்டிருக்கும்போது ஜார்ஜ் பெல் தங்களிடம் தவறாக நடந்ததாகவும், முறையற்ற விதத்தில் தொட்டதாகவும் 40 வயதான இருவர் புகார் அளித்துள்ளனர்.
 
ஆலய பாடகர் குழுவில் உள்ள 2 இளைஞர்களும் ஜார்ஜ் பெல் மீது பாலியல் புகார் கூறியுள்ளனர். மேலும் மூன்று சிறுவர்கள் முன் ஜார்ஜ் பெல் ஆடையின்றி நின்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
இவை தவறான குற்றச்சாட்டு எனவும், அவதூறு பிரச்சாரம் எனவும் மறுத்துள்ள ஜார்ஜ் பெல் இது தனக்கு அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது என கூறியுள்ளார். இவர் மீதான இந்த குற்றச்சாடுகள் கடந்த ஓராண்டாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்