Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவுக்கு எதிராக கனடா... ஒலிம்பிக்ஸ் தொடரை தூதரக ரீதியில் புறக்கணிக்க முடிவு!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (14:02 IST)
அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை தொடர்ந்து குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடரை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக கனடா அறிவிப்பு. 

 
குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் அடுத்த ஆண்டில் சீனாவில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் உலக நாடுகளை சேர்ந்த வீரர்கள் பலரும் பங்கேற்பது மட்டுமல்லாது உலக நாட்டு அமைச்சர்கள், அரசியல் தலைவர்களும் பார்வையாளராக இடம்பெறுவது வழக்கம்.
 
சீனாவில் இன சிறுபான்மையிருக்கு எதிரான மனித உரிமைமீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டுகொண்டது. இதனால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை தொடர்ந்து  சீனாவில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக கனடா அறிவித்துள்ளது.
 
ஆம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலும் ஒலிம்பிக் போட்டிகயை தூதரக ரீதியில் புறக்கணிப்பது குறித்து நியூஸிலாந்து, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளும் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments