Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரஸல்ஸ் நகரில் மிக அதிகபட்ச உஷார் நிலை:16 பேர் கைது

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2015 (21:44 IST)
பெல்ஜியத் தலைநகர் பிரஸல்ஸில் மிக அதிகபட்ச உஷார் நிலை நீட்டிக்கப்படுகிறது.  ஞாயிற்றுகிழமை இரவு 16 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.


 

 
இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படக்கூடும் எனும் அச்சுறுத்தல்கள் தொடருவதால் நாட்டின் தலைநகர் இந்த அதிகபட்ச உஷர் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
பாரிஸில் நடைபெற்றது போன்ற தாக்குதல்கள் அங்கு நடைபெறாமல் தடுப்பதற்காகவே இந்த தயார் நிலை என்று கூறப்படுகிறது.


 

 
 
திங்கட்கிழமை பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தலைநகரின் மெட்ரோ ரயில் போக்குவரத்து ஆகியவை மூடப்பட்டிருக்கும் என பிரதமர் சார்லஸ் மிச்சல் கூறியுள்ளார்.
நாட்டின் இதர பகுதிகளிலும் மேம்பட்ட அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன எனவும் பெல்ஜியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
 
தலைநகர் பிரஸல்ஸில் மேலும் கூடுதலாக காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்படுவர் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
நாட்டில் இந்த மிக அதிகபட்ச உஷார் நிலை சனிக்கிழமை அறிவிக்கப்பட்டதை அடுத்து கடைகள், உணவு விடுதிகள், பொதுக் கட்டிடங்கள் ஆகியவை மூடும் நிலை ஏற்பட்டது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments