Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக வலைத்தளத்தில் மணமகள்: விவாகரத்து கோரிய மணமகன்

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2016 (16:53 IST)
திருமணமாகி இரண்டு மணி நேரத்தில் மணமகள் சமூக வலைதளம் பயன்படுத்தியதாக மணமகன் விவாகரத்து கோரிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சவுதி ஜெட்டா பகுதியில் திருமணமான இரண்டு மணி நேரத்தில் மணமகன் விவாகரத்து கோரியுள்ளார். திருமண புகைப்படத்தை மணமகள் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால், மணமகன் ஆத்திரமடைந்து இத்தகைய முடிவை எடுத்தார்.
 
திருமணத்துக்கு முன் மணமகன் பெண் வீட்டாரிடம் ஒரு நிபந்தனை விடுத்தார். அது மணமகள் திருமணத்துக்கு பிறகு ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடாது என்பது.
 
மணமகள் ஆர்வம் மிகுதியால் திருமணம் நடைப்பெற்ற சிறிது நேரத்தில் திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதை அறிந்த மணமகன், மணமகள் நிபந்தனையை மீறியதால், தனக்கு கட்டுப்படாமல் நடந்து கொள்ளும் பெண்ணுடன் வாழ முடியாது என்று கூறி விவாகரத்து செய்ய போவதாக தெரிவித்தார்.
 
இதையடுத்து மணமகள் குடும்பம் அதிர்ச்சியில் மூழ்கியது. திருமணமான இரண்டு மணி நேரத்தில் விவாகரத்து கோரி அழைப்பு விடுத்த சம்பவம் மணமகள் வீட்டாரை மிகவும் பாதித்துள்ளது.

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த கட்டுரையில்