Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உணவகத்திற்குள் அனுமதிக்கப்படாத அதிபர்: சாலையில் நின்று பீட்சா சாப்பிட்டார்!

உணவகத்திற்குள் அனுமதிக்கப்படாத அதிபர்: சாலையில் நின்று பீட்சா சாப்பிட்டார்!
, செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (17:12 IST)
உணவகத்திற்குள் அனுமதிக்கப்படாத அதிபர்: சாலையில் நின்று பீட்சா சாப்பிட்டார்!
உணவகத்திற்கு உள்ளே அதிபர் அனுமதிக்கப்படவில்லை என்பதற்காக அவர் சாலையில் நின்று பீட்சா சாப்பிட புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது
 
கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் நியூயார்க் உணவகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என அனைத்து உணவகங்களிலும் போர்டு வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிரேசில் நாட்டின் அதிபர் சமீபத்தில் நியூயார்க் சென்று இருந்தார். அப்போது அவர் ஒரு உணவகத்தில் பீட்சா சாப்பிட விரும்பிய நிலையில் அவர் தடுப்பு ஊசி செலுத்தி விட்டாரா என்று சோதனை செய்யப்பட்டது. ஆனால் பிரேசில் அதிபர் தடுப்பூசி செலுத்தவில்லை என்று தெரிய வந்ததை அடுத்து அவர் உணவகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனை அடுத்து அவர் சாலையிலேயே நின்று பீட்சா சாப்பிட்டார் 
 
இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனக்கு நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் கொரோனாவை எதிர்த்துப் போராடும் அளவுக்கு வலிமையானது என்பதால் தான் தடுப்பூசி செலுத்தவில்லை என பிரேசில் அதிபர் விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளாட்சி தேர்தல்: தனித்து போட்டியிடும் இன்னொரு கட்சி!