Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகத்தை எச்சரித்த பில்கேட்ஸுக்கே கொரோனா ! - அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 11 மே 2022 (08:29 IST)

உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வரும் நிலையில் பல கோடி மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பு ஊசிகளை செலுத்தி வந்தாலும் மீண்டும் புதிய வேரியண்டுகள் உருவாகி வருகின்றன.

 

இந்நிலையில் கொரோனா வருவதற்கு முன்னரே பெருந்தொற்று குறித்து உலக நாடுகளை எச்சரித்தவர் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ். தற்போது அவருக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனக்கு கொரோனாவின் லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும், அதனால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

 

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியும் பில்கேட்ஸ் செலுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments