Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டம் எதிரொலி: வங்கதேச அலுவலகத்தை மூடியது எல்.ஐ.சி..!

Siva
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (13:48 IST)
வங்கதேசத்தில் பெரும் போராட்டம் மற்றும் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில் வங்கதேசத்தில் உள்ள எல்ஐசி அலுவலகம் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் மற்றும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா  பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்து விட்டார்.

இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த வன்முறையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வங்கதேசத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் வங்கதேசத்தில் உள்ள எல்ஐசி அலுவலகம் மூடப்படும் என எல்ஐசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வங்கதேசத்தில் உள்ள எல்ஐசி அலுவலகத்தின் அலுவலர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் இந்தியா திரும்ப விரும்பினால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் எல்ஐசி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வங்கதேசத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், கடைகள் ஆகியவை வன்முறை காரணமாக மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நேரலைக்கு தடை விதிக்க முடியாது.! மேற்குவங்க கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்.. பெரியாருக்கு வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்.. சில நிமிட இடைவெளியில் ட்விட்..!

"மோடி ஆட்சியின் 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி திட்டங்கள் தொடக்கம்" - அமித்ஷா பெருமிதம்..!

தமிழ் ஆசிரியருக்கு இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நிபந்தனை விதிப்பதா.? மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்.!!

ஏட்டில் 500, எதிரில் 230: சென்னை அருகே அரசுப் பள்ளியில் போலி மாணவர் சேர்க்கை மோசடி நடந்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments