Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதைக்கும்போது வீறிட்டு அழுத குழந்தை

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (15:37 IST)
வங்காள தேசத்தில் பிறந்த குழந்தை ஒன்று இறந்ததாக கருதி இடுகாட்டில் புதைக்கும் நேரத்தில், வீறிட்டு அழுததால், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


 


 
வங்காள தேசத்தில் மாவட்ட கிரிக்கெட் வீரர் நஜ்மில் ஹுடா என்பவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
 
பிறந்ததவுடன் குழந்தைக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 2 மணி நேரத்தில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அதைத்தொடர்ந்து குழந்தைக்கு இறுதி சடங்கு செய்து இடுகாட்டில் புதைக்க முடிவு செய்தனர். இரவு நேரம் ஆகியதால் மறுநாள் புதைக்கலாம் என்று குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து இடுகாட்டிலே விட்டு சென்றனர்.
 
மறுநாள் இடுகாட்டில் புதைக்க சென்ற நேரத்தில் பெட்டிக்குள் இருந்த குழந்தை வீறிட்டு அழுதது. உடனே குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
 
அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக டாக்கா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒரு நாள் முழுவதும் இறந்த நிலையில் இருந்த குழந்தை, மறுநாள் திடீரென்று உயிர் பிழைத்தது என்பது அதிசயமான ஒன்றாக உள்ளது.   
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments