Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 25 பேர் பலி

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (17:33 IST)
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ‘தருல் குரான் இட்டிஃபா’ என்ற பள்ளி இயங்கிவருகிறது. மத போதனைப் பள்ளியான  இதில் 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மணவர்கள் பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளியில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாகத் தீ விபத்து ஏற்பட்டது.

 

 
 
இந்நிலையில் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ பின்பு கட்டடம் முழுவதும் பரவியது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக  பள்ளி சிறுவர்கள் யாரும் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே 23 மாணவர்கள், 2  கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
இதில் படுகாயமடைந்த 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்  தீயணைப்பு நிலைய அதிகாரி கிருதீன் ட்ராமன் உறுதி செய்துள்ளார்.
 
கடந்த அக்டோபர் மாதம் மலேசியாவின் ஜோகர் மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர் என்பது  குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

அடுத்த கட்டுரையில்
Show comments