Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியாவில் மீண்டும் விஷக் குண்டு தாக்குதல்

Webdunia
வெள்ளி, 2 மே 2014 (16:45 IST)
சிரியாவில் நடந்த விஷக் குண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சி படை சில நகரங்களைக் கைப்பற்றியுள்ளன. அவற்றை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுவருகிறது. அந்த நகரங்களின் மீது விஷக் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
முன்னர் இட்லிப், ஹமா மாகாணங்களில் இது போன்று தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பலர் பலியாயினர். இதற்கு ஐ நா சபை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் அதை சிரியா மறுத்தது. இந்நிலையில் மீண்டும் விஷக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அல் தமனாக் நகரின் மீது பறந்த ஹெலிகாப்டர் 2 விஷக் குண்டுகளை வீசியதாக தெரியவந்துள்ளது. அவை குளோரின் வாயுவை வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்ததாகுதலை சிரியா நடத்தவில்லை என்று அறிவித்துள்ளது.
 
 

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments