Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்துக் கோவில் மீது தாக்குதல்

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (19:55 IST)
வெளிநாடுகளில்  உள்ள இந்துக்கோயில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடந்து வரும் நிலையில், இன்று மீண்டும் ஆஸ்திரேலியாவிலுள்ள  இந்துகோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில், பிரதமர் ஆண்டனி அல்பனேசி தலைமையிலான ஆஸ்திரேலியா லேபர் பார்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைப் போன்று இங்கும் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 4  மாதங்களில் மட்டும் இங்குள்ள இந்துக் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமீபத்தில், இதுபற்றி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்., வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசினார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்துக்கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

பிரிஸ்பேனில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணன் கோவிலில் உள்ள சுற்றுச்சுவரில், இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராவும் வாசகங்கள் எழுதிவைத்துள்ளனர்.

இதுகுறித்து, கோவில் நிர்வாகிகள் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். இதுவரை 2 மாதங்களில் மட்டும் 4 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவத்திற்கு நன்கொடை கேட்டு மோசடி குறுஞ்செய்தி! போலிகளை நம்ப வேண்டாம்! - இந்திய ராணுவம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

இரண்டே ஆண்டுகளில் இழுத்து மூடப்பட்ட 28 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments