Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுகிறார் ஆங்கஸ் டீட்டன்

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2015 (21:37 IST)
2015 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆங்கஸ் டீட்டன்(69) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
 
நுகர்வு, ஏழ்மை ஆகியவற்றை போக்குவது பற்றிய இவரது ஆய்வுக்காக நோபல் வழங்கப்படுவதாக அறிவியல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
ஆங்கஸ் டீட்டன் ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இங்கிலாந்த் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அதன் பிறகு பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1983 ஆண்டு பிரிட்டனிலிருந்து அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.
 
நோபல் பரிசு அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டீட்டன், இந்த அறிவிப்பு எனக்கு வியப்பும், மகிழ்ச்சியும் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

புதிய அணை - கேரள அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியக் கூடாது..! சீமான் வேண்டுகோள்..!!

எப்படி இருக்கிறார் வைகோ.? வதந்திகளை நம்பாதீர்கள் - மகன் வேண்டுகோள்..!

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை..!

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பள்ளி மாணவர்களின் பழைய பஸ் பாஸ் செல்லும? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு..!

Show comments