Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் போட்ட முதலை – அதிர்ச்சியடைந்த பெண்

Webdunia
ஞாயிறு, 28 ஜூலை 2019 (13:27 IST)
அமெரிக்காவில் நீச்சல் குளத்திற்குள் புகுந்து நீச்சல் போட்டுக்கொண்டிருந்த முதலையை கண்டு அதிர்ச்சியடைந்த பெண், அதை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் வாழ்ந்து வருபவர் கெரி கிபே. இவர் நேற்று இரவு நன்றாக தூங்கி கொண்டிருந்திருக்கிறார். அப்போது வித்தியாசமான சத்தம் கேட்பதை உணர்ந்து விழித்திருக்கிறார். எங்கே சத்தம் கேட்கிறது என்று பார்த்தவாறே சென்றவருக்கு அதிர்ச்சி.

அவர் குளிக்கும் நீச்சல் குளத்தில் சுமார் 7 அடி நீளமுள்ள முதலை ஒன்று நீந்திக் கொண்டிருந்தது. பயத்தில் ஒரு நிமிடம் உறைந்து நின்ற அவர் உடனடியாக முதலை பிடிக்கும் நபர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து நீண்ட நேர முயற்சிக்கு பிறகு அந்த முதலையை பிடித்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments