Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர மோடியால் முடியும் - அமெரிக்கா நம்பிக்கை

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (11:16 IST)
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்திய பிரதமர் மோடியால் முடியும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
 
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுக்க ஆரம்பித்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு போர் நடந்து வருகிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் ஆதரவாளித்த போதிலும் உக்ரைன் பெரும் சேதத்தை சந்தித்து வருகிறது என்பதும் இதனால் இந்த போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது ’இந்திய பிரதமர் மோடியால் உக்ரைன் - ரஷ்ய போரை நிறுத்த முடியும் என்றும் அவர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து போரை நிறுத்த வலியுறுத்தினால் கண்டிப்பாக இந்த போர் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
 
போரை நிறுத்த இந்திய  பிரதமர் மோடி அவர்கள் என்னென்ன முயற்சி எடுக்க வேண்டுமோ அதை அவரிடமே விட்டுவிடுகிறேன் என்றும் பிரதமர் மோடி என்ன முடிவு எடுத்தாலும் அதை அமெரிக்கா வரவேற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments