Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் - ஏராளமானோர் பலி

Webdunia
திங்கள், 20 அக்டோபர் 2014 (20:18 IST)
ஈரானில் மனித வெடிகுண்டு வெடித்ததில் 21 பேர் பலியானார்கள், மசூதி சேதமடைந்தது. இத்தகைய தாக்குதல்களால் கடந்த 10 நாட்களில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை பிடித்து வைத்து அதை இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக ஈராக் ராணுவத்துடன் இணைந்து அமெரிக்கா கூட்டணி படைகள் தாக்குதல் வேட்டை நடத்துகின்றனர்.
மேலும் ஷியா பிரிவினர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அவர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் தீவிரவாதிகள் கருதுவதால், ஷியா பிரிவினர் அதிகமாக வாழும் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இத்தகைய தாக்குதல்களால் கடந்த 10 நாட்களில் மட்டும் 150 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லபட்டுள்ளனர்.
 
ஈராக்கின் மேற்கு பாக்தாத்தில் உள்ள ஷியா மசூதியில் நடந்த  குண்டுவெடிப்பில் 21 பேர் பலியானார்கள் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.  மேற்கு பாக்தாத்தில் உள்ள மசூதியில் மர்ம மனிதன், தான் அணிந்து இருந்த வெடிகுண்டு வெடிக்க செய்ததில் மசூதி கடும் சேதமடைந்தது.
 
இந்த சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன்புதான் ஷியா பிரிவினர் வாழும் பகுதியில் நடைபெற்ற 3 கார்வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இதற்கு முன்பு நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். 65 பேர் படுகாயம் அடைந்தனர்.
 
தொடர்ந்து குண்டுவெடிப்புகள் மற்றும் எதிர் தாக்குதல்களால் அப்பகுதிகள் போர்களம்போல் காட்சியளிக்கின்றன.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

Show comments