Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்று வாங்க விமானத்தின் அவசர கால கதவை திறந்த பயணி கைது

Webdunia
புதன், 2 மே 2018 (07:50 IST)
சீனாவில் விமான பயணி ஒருவர் புழுக்கம் காரணமாக அவசர கால கதவை திறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் சென் (25) என்ற நபர் விமானம் மூலம் வெளியூர் செல்ல திட்டமிட்டு சீனாவின் சென்ஜென் விமான நிலையத்திற்கு சென்று, விமானத்தில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். விமானம் புறப்படும் நேரத்தில், சென் விமானத்தின் அவசர கால கதவுகளை திறந்து இருக்கிறார். இதனால் விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. மூன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் காலதாமதம் ஆனது.
இதையடுத்து சென் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விமானத்தில் புழுக்கம் அதிகமாக இருந்ததாகவும், அதனால் ஜன்னலை திறப்பதாக நினைத்துக் கொண்டு அவசர கால  கதவுகளை தவறுதலாக திறந்ததாக அவர் கூறியுள்ளார். சென் கூறினார். பயணிகளுக்கு இடைஞ்சலாக இருந்ததால் வருக்கு 15 நாள் சிறை தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments