Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்த கொடூரர்கள்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (08:21 IST)
அமெரிக்காவில் ஒரு கொடூர ஜோடி குழந்தை வேண்டும் என்பதற்காக   கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த சவன்னா என்ற 22 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காணாமல் போனதால் இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
 
இதனிடையே சவன்னாவின் சடலம் ஒரு காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது
 
இதுகுறித்து விசாரித்து வந்த போலீஸார் சவன்னாவின் பக்கத்து வீட்டாரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மீது சந்தேகித்த போலீஸார் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குழந்தை இல்லாத ஜோடி குழந்தைக்கு ஆசைப்பட்டு கர்ப்பிணியாக இருந்த சவன்னாவின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்துள்ளனர் என்பதும் இதில் சவன்னா பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
 
போலீஸார் அந்த ஜோடியை கைது செய்தனர். குழந்தைக்காக ஒரு அப்பாவி பெண்ணை கொலை செய்த இவர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments