Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல்! கடிதம் எழுதிய ஆசாமிக்கு 33 மாதங்கள் சிறை!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (09:13 IST)
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மிரட்டல் கடிதங்கள் அனுப்பிய நபருக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டில் பதவியேற்று ஜோ பைடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களில் அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சில கடிதங்கள் வந்துள்ளது. அந்த கடிதங்களில் ஒருவிதமான வெள்ளை தூள் இருந்ததால் பரபரப்பு எழுந்தது.

இதுகுறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஜார்ஜியாவை சேர்ந்த ட்ராவிஸ் பால் என்பவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் ஜோ பைடன் மட்டுமல்லாமல் மேலும் பல அரசாங்க அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட பலருக்கும் இதுபோன்ற மிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது.

அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 7,500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 33 மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments