Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன 5000 பேரின் நிலை என்ன?

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (18:05 IST)
கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்தோனிசியாவில் உள்ள சுலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. 
 
நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் வீடுகள், கடலோர குடியிருப்பு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து விழுந்தது. 
 
வீடுகளை இழந்த மக்கள் முகாம்கலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தற்போது மேலும் பாதிப்பில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், போலீஸாரும் ஈடுப்பட்டுள்ளனர். 
 
பலு நகரில் பலரோ மற்றும் பெடோபோ பகுதிகளில் காணாமல் போனவர்களில் 1000 பேர் அங்குள்ள 3 மீட்டர் ஆழமுள்ள சேற்றில் புதைந்து இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 74 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 
 
இதைத்தொடர்ந்து சுமார் 5,000 பேர் காணாமல் போயுள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மீட்புத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments