நாளை ஒரே வரிசையில் ... 5 கிரகங்கள் வானில் தோன்றும் அதிசயம்

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (21:14 IST)
தினமும் வானில், வெள்ளி, சந்திரன் ஆகிய கோள்களை மட்டுமே நாம் பார்த்து வருகிறோம். எப்போதாவது சனி, வியாழன் போன்றவை கண்களில் தட்டுப்படும்.

இந்த நிலையில், நாளை  ஒரே நாளில்  ஒரே வரிசையில் 5 கிரகங்கள் வானில் தோன்றவுள்ளது.

இதுகுறித்து நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக், இந்த வாரம் குறிப்பாக செவ்வாய்க்கிழாய் அன்று செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் நிலவுக்கு அருகே ஓரே வரிசையில்தோன்றும். இதைக் காண விரும்புவோம், சூரியன் மாலை மறைந்த பின் வானத்தை உற்றுக் கவனிக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், அரைமணி நேரத்தில், வியாழனும், புதனும் மறைந்துவிடும் என்று கூறியுள்ள அவர்,  வெறும் கண்களால் பார்ப்பதைவிட பைனாகுலர் இருந்தால் இவற்றைக் காணமுடிவும் என்று கூறியுள்ளார்.

கடந்தாண்டு கோடை காலத்தில் இதேபோல் 5 கிரகங்கள் வரிசையாக தோன்றிய நிலையில் தற்போது மீண்டும் 5 கிரகங்கள் வரிசையாகத் தோன்றவுள்ளதால், விஞ்ஞானிகளும், மக்களும் இதைக் காண ஆவலுடன் உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments