Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரம்ஜான் நோன்பு கடைபிடிக்காத 5 பேர் படுகொலை: ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறிச் செயல்

Webdunia
வியாழன், 2 ஜூலை 2015 (03:53 IST)
சிரியாவில், ரம்ஜான் நோன்பு கடைபிடிக்காத 5 பேரை கொடூரமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர்.
 

 
இது குறித்து, சிரியா மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த திங்கள் கிழமை அன்று அல்-மையடின் நகரத்தில் கொடூரமாகச் சிதைக்கப்பட்ட நிலையில் 5 உடல் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த உடல்களில் உள்ள கழுத்தில் ஒரு சீட்டு கட்டப்பட்டு, அதில் சில தகவல்கள் எழுதப்பட்டு இருந்தது.
 
அந்தச் சீட்டில், ரம்ஜான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்காத காரணத்தால், இவர்களை ஒரு நாள் முழுவதும் சித்ரவதை செய்து, பின்பு 70 சவுக்கடிகள் தண்டனையாக கொடுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
 
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் காரணமாக, அங்கு உதுவரை சுமார் 3,027 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகச் சிரியா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments